Saturday, February 7, 2009

மனிதன்!!

மனிதன்!! மரண தண்டனையோடு பிறந்த ஆயுள் கைதி..

என்னையும் இழக்கிறேன்..


முதல் சந்திப்பு சின்ன இதழ் விரிப்பில் தொடங்கி ........
இது யார் பொருட்டோ , நானறியேன் , ஆன போதும் என் குறிப்பு இதோ.....

>>உன் அருகாமை இன்றி தொலைந்து போன இந்த காலபெறுவெளியெலாம், உன்னோடு நானிருக்கையில் நிகழ்ந்து முடிந்த நினைவு பிறள்களாய் இருந்தெழுந்து விட கூடாதா!! என்ற ஏக்கம், என் இதயத்தின் சிறு பகுதியை மட்டும் துடிப்பதற்காய் விட்டு விட்டு முழுதுமாய் அடைத்து கொண்டிருக்கிறது..

>>இந்த பொல்லா காலம் வலிகளை மட்டுமல்ல பல நேரம் உறவுகளையும் மரத்து மறக்கடித்து விடுகிறது, மறந்து மரத்தும் விட்ட அந்த நினைவுகள் சில நேரம் கண்ணமுதம் சுரக்க செய்யும்.. யாரோ யாரையோ "தம்பி!" எனும் போது..

>>உன் முகவரி தளத்தில் இருந்து ஒரேழுத்து கசிந்து விடாதா!! என்று நான் கண்புதைத்து காத்திருந்த - என் அதே மின் அஞ்சல்பெட்டியுள் உன் முழு நீள நிரலொன்று , எனக்காய் இரு நாட்கள் காத்திருக்க நேரிட்டதே!! >>வாழ்வின் இந்த பிழைப்பு போராட்டத்தால் (survival) நம் உறவுகள் பழுப்படைவதாய் என் நெஞ்சம் கனக்கிறது! வழி ஏதும் தெரிந்தால் சொல், நம் நாட்களை மீட்டு தர! உன்னை இழப்பதால் என்னையும் இழக்கிறேன்..


அக்கா!!
I MISS YOU!!