Saturday, December 15, 2007

மீண்டும் என் பாரதம்!!


தடம் புதிதென மடம்பொடிபட இடமிதுவென
கும்மி அடி பெண்ணே ! கும்மி அடி !!

புதிதிதுவென புயல் வெளிவரும் -ஆங்
குபுகுபுவென அனல் சுடர் விடும்.

அன்று; சாதித்திட்டோம் என கும்மி அடி!!
புது சாவித்திட்டோம் என கும்மி அடி!!

புவி ஆனந்த சக்கரம் சுற்றுதடி
அதை ஆள்பவர் நாமென கும்மி அடி!!

ஏன் அந்த சக்கரம் நிற்குதோடி
இங்கு பாதகர் பாதகம் உற்றதோடி!!

Wednesday, December 5, 2007

என் பாரதம்.....



பூக்களை கடுக்கினும்

புலனறி துன்புனற்

இடமொரு , உள்ளென்று,

சிறார்க்கு கதை பறைவார், - இவர்

தன்னை அறிந்திலையே! -கிள்ளாய்!!

உண்மை உணர்திலையே!!!



நீதிஎன்றும் பரஞ்சோதி என்றும்

காக்கைக்கு கறியிடுவார்- கிள்ளாய்!!

பக்கம் சோருக்கே போரிடுவார்!!



பொல்லா உண்மை உணர்த்துவேன் கேளடி -கிள்ளாய்!!

சாதிகள் பேற்றல் எனப்பாடம்

செய்வார் கோனார் உரை தனிலே!!!!



மொழியென்று மொழிவதிலே

அரசியல் புனைவார் -அவர்

மெயமுகம றியோமடி - கிள்ளாய்!!

இவர் காட்சிக்கு இனியரடி!!

சிலர் பேச்சுக்கு பெரியரடி!!



நாதி அற நலிந்தொழிந்த பின்

ஊழியம் தேவையோ?? - கிள்ளாய்!!

ஊறினை திருத்துவோம் வா!!!



மதமென்றும், மொழியென்றும் ஈடிலா,

இனமென்றும் சினங்கொண்டு குணங்

கெட்டு திறியோ மினி சாதி

சந்ததிகள் சாக்கடை சகதியடி...

சூளும் மானிட முடிச்சுகள் இட்டே

மனிதம் சமைதிடுவாய்!!

நமக்கு; குண்டுகள் வேண்டாமடி

பதில் செண்டுகள் செய்திடுவாய்!!!



இனி வார்த்தை எதுக்கடி கிள்ளாய்!! - இந்த

சூலகம் செதுக்கடி!!