Wednesday, December 5, 2007

என் பாரதம்.....



பூக்களை கடுக்கினும்

புலனறி துன்புனற்

இடமொரு , உள்ளென்று,

சிறார்க்கு கதை பறைவார், - இவர்

தன்னை அறிந்திலையே! -கிள்ளாய்!!

உண்மை உணர்திலையே!!!



நீதிஎன்றும் பரஞ்சோதி என்றும்

காக்கைக்கு கறியிடுவார்- கிள்ளாய்!!

பக்கம் சோருக்கே போரிடுவார்!!



பொல்லா உண்மை உணர்த்துவேன் கேளடி -கிள்ளாய்!!

சாதிகள் பேற்றல் எனப்பாடம்

செய்வார் கோனார் உரை தனிலே!!!!



மொழியென்று மொழிவதிலே

அரசியல் புனைவார் -அவர்

மெயமுகம றியோமடி - கிள்ளாய்!!

இவர் காட்சிக்கு இனியரடி!!

சிலர் பேச்சுக்கு பெரியரடி!!



நாதி அற நலிந்தொழிந்த பின்

ஊழியம் தேவையோ?? - கிள்ளாய்!!

ஊறினை திருத்துவோம் வா!!!



மதமென்றும், மொழியென்றும் ஈடிலா,

இனமென்றும் சினங்கொண்டு குணங்

கெட்டு திறியோ மினி சாதி

சந்ததிகள் சாக்கடை சகதியடி...

சூளும் மானிட முடிச்சுகள் இட்டே

மனிதம் சமைதிடுவாய்!!

நமக்கு; குண்டுகள் வேண்டாமடி

பதில் செண்டுகள் செய்திடுவாய்!!!



இனி வார்த்தை எதுக்கடி கிள்ளாய்!! - இந்த

சூலகம் செதுக்கடி!!

1 comment:

Uma Maheswari said...

nalla thamil chellathamil nama thambiyoda killai thamil