Thursday, November 22, 2007

காவிய காதல்...



*தயக்கமாய்.....

தயக்கமாய் அன்றவள் அழகுற கவிதை
............. ஒரு சொலலென்றாள்;

பக்கமாய் இழுத்தவளின் காதோரம் சுருண்டிருந்த
.............கருமேகம் விலக்கி விட்டவள் பெயர் சொன்னேன்,

அந்தோ; செல்லமாய் சலித்து கொண்டொரு
.............நீள கவி சொல்லென்றால்;

சிந்திப்பதாய் சிறு பாவனை செய்தன்ரோ-
.............ராயிரம் முறை சொன்னேனே உன் பெயரென்றேன்..

அக்கணம் அவலொழிக்க கருதியும் இதழோரம்
.............கசிந்த அந்நெழிவுகள் உறக்க சொல்லிற்றே

..............................................அவள் நாணத்தை.......




*மைவிழியால்!!

கனிஇடை சுலைதேன் சுவையுடை இதழுடயாளே!!

தளிர்த்துடை சிறுஇடையே ; பொடிநடை நகுளே!

பனிஉடை கதிரோ்னென் நுனி பட கலைந்தோளே!

நித்தம்! நகுளாதே பித்தம் புகுவிடும் என்னுள்!!