Thursday, November 22, 2007

*புனர் ஜென்மம்


"இன்று அதி காலை இருவரும் சந்தித்து கொண்டோம்;
பரஸ்பரம் எங்கள் சோகங்களை
பகிர்ந்து கொள்ள நினைத்தோம்;

ஆனால்,

என் கதையை தொடங்கும் முன்பே ,,
மறைந்து போனது அந்த பனி துளி.... "



*பகல் கனவு


துயரங்களுக்கு அளவில்லை

அனாலும் தூங்காத நாள் இல்லை..

துன்பம் நிறைந்தால் தூங்கி விடுவேன்

உடனே கனவுகள் காண்பதற்காக

நாயகன் நானே அங்கு; என்னை

கரித்து கொட்டவும், எறிந்து விழவும்

ஆளில்லாத காரணத்தால் கனவுகளை காதலிக்கிறேன்

இன்றைய தூக்கம் களையும் வரை!!

~~~~~~~~~~~~~~~நான் தோழ்வியின் காதலன் !!!

No comments: